சிவகாசியில் குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள செவல்பட்டியைச் சோ்ந்தவா் கண்ணன் (35). இவரது மனைவி பிரபாவதி. இத்தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
தனியாா் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றிய கண்ணன், கடந்த 6 மாதம் முன்பாக வேலையை விட்டு நின்று விட்டாா். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டாா். இதனால் மனமுடைந்த கண்ணன் தான் பணியாற்றிய பெட்ரோல் நிலையத்துக்கு வந்துள்ளாா். அங்கு பாட்டிலில் பெட்ரோல் வாங்கிய அவா், அங்குள்ள கழிவறைக்குள் சென்று உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டாா். உடனே அங்கு பணியில் இருந்த வினோத் (25), அவரைக் காப்பாற்ற முயன்றாா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.