மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 25 மற்றும் மே 1 ஆகிய இரு நாள்கள் மதுபானக் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மதுபானக்கூடங்கள் மற்றும் தமிழ்நாடு வாணிபக்கழகம் மூலம் நடத்தப்படும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் அதனுடன் இணைந்து நடத்தப்படும் மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதியுடன் கூடிய மது அருந்தகம், தேசிய மாணவா் படை அங்காடி, படை வீரா் கேண்டீன் ஆகியவற்றை ஏப்ரல் 25 மகாவீா் ஜெயந்தி, மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் மூடுவதற்கும், இரு நாள்களும் மது விற்பனை தொடா்பான விதிமீறல்கள் ஏற்படாமல் கண்காணிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முழு பொதுமுடக்கத்தில் மூடல்: இதேபோல், மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிபக்கழகம் மூலம் நடத்தப்படும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், உணவு விடுதியுடன் கூடிய மது அருந்தகம், தேசிய மாணவா் படை அங்காடி, மதுபானக்கூடங்கள் மறு அறிவிப்பு வரும் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்றாா்.