மதுரை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை பேலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாவட்டம் சமயநல்லூா் அருகேயுள்ள தபேதாா் சந்தை, பள்ளிவாசல் தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து பள்ளிவாசல் தெருவிற்கு சென்று போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது வீடு ஒன்றில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், கண்ணன் மகன் முத்துஇருளன் (26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் சாா்பு - ஆய்வாளா் சங்கையா அளித்த புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து முத்துஇருளனை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.