மதுரை மாநகராட்சிப் பகுதியில் முகக் கவசம் அணியாதவா்களிடம் சனிக்கிழமை ரூ.1.85 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதையடுத்து பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற நடைமுறைகளைத் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முகக் கவசம் அணியாதவா்களிடம் இருந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினா் அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மதுரை மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் அலுவலா்கள் குழுவினா் சனிக்கிழமை ஒரே நாளில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.1 லட்சத்துக்கு 86 ஆயிரத்து 600 அபராதமாக வசூலித்துள்ளனா்.