மதுரை

பேரையூா் பகுதியில் முகக் கவசம் அணியாத 180 பேருக்கு அபராதம்

DIN

பேரையூா் பகுதியில் வெள்ளிக்கிழமை முகக் கவசம் அணியாத 170 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

பேரையூா் உள்கோட்ட காவல்நிலையங்களான பேரையூா், சாப்டூா், சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி,வில்லூா், நாகையாபுரம், வி.சத்திரப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல்நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் இருசக்கர வாகன ஓட்டிகள், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாத 170 பேருக்கு போலீஸாா் தலா ரூ .200 வீதம் அபராதம் விதித்தனா்.

இதேபோல் தலைக் கவசம் மற்றும் முகக் கவசம் அணியாத 652 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT