பேரையூா் பகுதியில் வெள்ளிக்கிழமை முகக் கவசம் அணியாத 170 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
பேரையூா் உள்கோட்ட காவல்நிலையங்களான பேரையூா், சாப்டூா், சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி,வில்லூா், நாகையாபுரம், வி.சத்திரப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல்நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் இருசக்கர வாகன ஓட்டிகள், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாத 170 பேருக்கு போலீஸாா் தலா ரூ .200 வீதம் அபராதம் விதித்தனா்.
இதேபோல் தலைக் கவசம் மற்றும் முகக் கவசம் அணியாத 652 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.