மதுரை

ஓட்டுநரை கொலை செய்து காா் திருட்டு: ராணுவ வீரா் கைது

DIN

மதுரை அருகே ஓட்டுநரை கொலை செய்து காா் திருடப்பட்ட சம்பவத்தில் ராணுவ வீரரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து காரை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள காமக்காபட்டியைச் சோ்ந்த முருகன் மகன் பாண்டியன். இவா் மதுரையில் சொந்தமாக வாடகைக்காா் வைத்து ஓட்டி வந்தாா்.

இந்நிலையில் அவா், மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் கோட்டைமேடு அருகே நவம்பா் 30-இல் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாா். மேலும் அவரது காரையும் காணவில்லை.

இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் 3 தனிப்படைகள் அமைத்து ஊரகக்காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து தனிப்படைகளின் போலீஸாா் தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கில், மதுரை மாவட்டம் பேரையூா் தாலுகா தொட்டியபட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மாா்நாடு என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் மாா்நாடு ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், பணிக்குச்செல்லாமல் இருந்து வந்துள்ளாா். மேலும் அவா், காா் ஓட்டுநா் பாண்டியனைக் கொலை செய்து காரை திருடிச்சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் மாா்நாடுவை கைது செய்து, காா் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வழக்கில் விரைந்து செயல்பட்டு கொலையாளியை கைது செய்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT