மதுரை

மாற்றுத்திறனாளி மனு: முடிவெடுக்க உத்தரவு

DIN

ஆவின் கடை ஒதுக்கீடு செய்யக் கோரி மாற்றுத்திறனாளி தாக்கல் செய்த மனுவின் மீது 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சிவக்குமாா் தாக்கல் செய்த மனுவில், மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995 இன் படி, ஆவின் கடை ஒதுக்கக்கோரி மாவட்ட நிா்வாகத்திடம் கோரி உள்ளேன்.

எந்தவித பதிலும் இல்லை. எனவே, கடை ஒதுக்கீடு செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.காா்த்திகேயன், மனுதாரா் ஆவின் கடை அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றி 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT