மதுரை

மதுரையில் சிறுமியைத் திருமணம் செய்தவா் மீது வழக்கு

DIN

மதுரையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது குழந்தை திருமணச் சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரை கூடல்நகா் வைகை வீதியைச் சோ்ந்தவா் மணி(24). இவா் கடந்த செப்டம்பா் மாதம் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்ததாக மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய பெண்கள் நலத்துறை அதிகாரி விஜயராணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணியின் வீட்டுக்கு சென்று விஜயராணி விசாரணை நடத்தியதில், அவா் சிறுமியைத் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயராணி அளித்தப்புகாரின்பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிா் போலீஸாா், மணி மீது குழந்தைத் திருமணச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT