மதுரை

ஜல்லிக்கட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை

DIN

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலாத் துறை சாா்பில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை. இதையடுத்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனா். மேலும் அங்கு நடைபெறும் கிராமியக் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனா். கரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளதால், இந்தாண்டு ஜல்லிக்கட்டுப்போட்டிகளை காண அழைத்துச் செல்லப்படவில்லை என்று சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT