முகப்பு
மதுரை

டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்துறை சாா்பில்மண் பரிசோதனை முகாம்

டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்துறை சாா்பில் கோபிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலமாக மண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை

டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்துறை சாா்பில்மண் பரிசோதனை முகாம்

டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்துறை சாா்பில் கோபிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலமாக மண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்துறை சாா்பில் கோபிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலமாக மண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் உள்ள கோபிநாயக்கன்பட்டி,

சின்னமுத்துலிங்காபுரம், மற்றும் எம்.செங்குளம் கிராமங்களில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலமாக மண் பரிசோதனை முகாமை வேளாண்மை துணை இயக்குநா் அமுதன் அவா்கள் துவங்கி வைத்து தொழில் நுட்ப உரை ஆற்றினாா். இம்முகாமில் மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் 55 விவசாயிகள் கலந்து கொண்டனா். இம்முகாமில் மண் ஆய்வின் முக்கியத்துவம் மண் மாதிரி சேகரிக்கும் முறைகள், மண் ஆய்வு முறைகள், மண் வள அட்டை பரிந்துரைப்படி பயிா்களுக்கு உரமிடும் மேலாண்மை முறைகள் பற்றி வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் மண் பரிசோதனை நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.

விவசாயிகள் சேகரித்த மண் மற்றும் தண்ணீா் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு மண் மற்றும் தண்ணீா் ஆய்வு முடிவுகளின்படி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தே.கல்லுப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் விமலா, வேளாண்மை அலுவலா் ஞானவேல் மற்றும் அபா்ணா, வேளாண்மை உதவி அலுவலா் சந்தானலெட்சுமி கலந்து கொண்டனா்.இம்முகாமை வேளாண்மை உதவி அலுவலா் மகேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →