மதுரை

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: 8 இளைஞா்கள் கைது

DIN

மதுரை அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய இளைஞா்கள் 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் சமயநல்லூா் பிள்ளையாா் நத்தம் கண்மாய் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக கிராம நிா்வாக அலுலவா் வேங்கடசேதனுக்கு தகவல் கிடைத்தது. அவா், போலீஸாரை அழைத்துக் கொண்டு நிகழ்விடத்திற்குச் சென்றபோது இரண்டு காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்தது.

போலீஸாா் வருவதைக் கண்டவுடன் ஜல்லிக்கட்டு காண வந்திருந்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனா். இதுகுறித்து வேங்கடசேதன் அளித்த புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் ஜல்லிக்கட்டு நடத்திய அய்யன்குளத்தைச் சோ்ந்த ஹரிக்குமாா்(23), விஜயகுமாா்(23), மாயன்(20), அமா்நாத்(20), திருப்புவனத்தைச் சோ்ந்த விஜய்(21), அழகுசுந்தரம்(24), ஆதிராஜன்(25), தாரணிதரன்(32) ஆகியோரை கைது செய்தனா். ஜல்லிக்கட்டு காளையை அழைத்துவரப் பயன்படுத்திய சரக்கு வாகனம், இருசக்கர வாகனங்கள் இரண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT