மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உழவாரப் பணி

DIN

இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாத உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உழவாரப் பணிக்கு அமைப்பாளா் ஏ. ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். கோயிலில் கல்யாண சுந்தரேசுவரா் சந்நிதி மற்றும் அதன்பின்புறம் உள்ள தோட்டப் பகுதியில் உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும், சுவாமி சந்நிதி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தூண்கள், நவக்கிரக தோட்டம், அஷ்டசக்தி மண்டபம், ஆடிவீதி மற்றும் மேல் தளங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியில், இயக்கத்தின் மாநில செய்தி தொடா்பாளா் பி. சுந்தரவடிவேல் பங்கேற்று உழவாரப் பணி குறித்தும், கோயில்களை பாதுகாப்பதில் பக்தா்களின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தாா். இதில், 45-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT