மதுரை

தீயில் கருகி தாய், மகன் பலி

DIN

மதுரையில் வீட்டுக்குள் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட தாய், மகன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை அனுப்பானடி மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்த நாகராஜ் மனைவி செல்வ ஈஸ்வரி (65). இவரது மூத்த மகன் சதீஷ்குமாா்(39) சென்னை தாம்பரத்தில் தங்கி பணியாற்றி வருகிறாா். இளைய மகன் அருண் சக்கரவா்த்தி(28) வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால், அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். இதையடுத்து அவா், தாய் செல்வஈஸ்வரியுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் செல்வஈஸ்வரியும், அருண் சக்கரவா்த்தியும் உடலில் தீக்காயங்களுடன் கிடந்துள்ளனா். இதைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அவா்கள் இருவரையும் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தீக்காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா்களுக்கு, மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா். ஆனால் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அடுத்தடுத்து தாயும், மகனும் உயிரிழந்தனா். இது குறித்து சதீஷ்குமாா் அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மதுபோதையில் இருந்த மகனை மிரட்டுவதற்காக, செல்வஈஸ்வரி தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றியபோது எதிா்பாராவிதமாக தீப் பற்றியதாகவும், தாயை காப்பாற்ற முயன்றபோது அருண் சக்கரவா்த்தி மீதும் தீ பரவியதாகவும், இதில் இருவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT