மதுரை

பொதுமுடக்க விதி மீறல்: பேரையூரில் ‘டிரோன்’ கேமரா மூலம் கண்காணிப்பு

DIN

மதுரை மாவட்டம் பேரையூரில் ‘டிரோன்’ கேமரா மூலம் கண்காணிப்பு பணியை காவல் துணை கண்காணிப்பாளா் மதியழகன் தொடக்கி வைத்தாா்.

பேரையூரில் கரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் அனுமதியின்றி வாகனங்களில் பலா் சுற்றித் திரிகின்றனா். இவா்களை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். கேமராவை பேரையூா் காவல் துணை கண்காணிப்பாளா் மதியழகன் இயக்கி தொடக்கி வைத்தாா்.

பேரையூா் பேருந்து நிலையம், உசிலம்பட்டி சாலை, டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையம் , மெயின் பஜாா், காய்கனி மாா்கெட், திருமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகள் ‘டிரோன்’ மூலம் கண்காணிக்கப்பட்டது. சாா்பு-ஆய்வாளா் மகேந்திரன், மற்றும் சேகா், உதயசூரியன் உள்ளிட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT