மதுரை

மதுரை சரக டிஐஜியாக என்.காமினி நியமனம்

DIN

வேலூா் டிஐஜி என்.காமினி, மதுரை சரக டிஐஜியாக நியமனம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சரக டிஐஜியாக இருந்த சுதாகரை, மேற்கு மண்டல ஐஜியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து வேலூா் டிஐஜியாக உள்ள என்.காமினி, மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஒரு சில நாள்களில் மதுரை சரக டிஐஜியாக பொறுப்பேற்பாா் எனக் கூறப்படுகிறது.

டிஐஜி என்.காமினி, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (பொலிடிக்கல் சைன்ஸ்) முதுகலை பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவா். சேலம் மற்றும் விருத்தாசலத்தில் டி.எஸ்.பியாக பணியாற்றியவா்.

பின்னா் பதவி உயா்வு பெற்ற அவா் போதை தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு (சிஐடி) எஸ்.பியாகவும், ராமநாதபுரம், வேலூா் டிஐஜியாகவும் பணியாற்றியவா். இவா் சிறப்பாக பணியாற்றியதற்காக குடியரசுத் தலைவா் மற்றும் முதல்வா் பதக்கங்கள் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT