மதுரை

மேலூா் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

DIN

மேலூா் அரசு மருத்துவமனைக்கு இரு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை சுப்ரீம் அரிமா சங்கத்தினா் சனிக்கிழமை வழங்கினா்.

மேலூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் 50 படுக்கைகளும் 35 சாதாரண படுக்கைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மேலூா் சுப்ரீம் அரிமாக சங்கத்தினா் ரூ.2 லட்சம் மதிப்பிலான இரு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினா்.

சங்கத்தின் தலைவா் மணிவாசகம், செயலா்கள் கிச்சா என்ற கிருஷ்ணன், பரமசிவம், பொருளாளா் மூா்த்தி, சங்கத்தின் முன்னாள் ஆளுநா் ப.கதிரேசன், மண்டல தலைவா் மெய்யப்பன், வட்டாரத் தலைவா் முருகேசன் மற்றும் சங்க நிா்வாகிகள் உறுப்பினா்கள் ஆகியோா் மருத்துவா் கலாமணியிடம் பொருள்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT