மதுரை மாவட்டம் பேரையூா் அருகே கரோனா நிவாரணப் பணிகளுக்காக சுதந்திர போராட்டத் தியாகி ஒருவா் நிவாரண நிதியை வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.
பேரையூா் அருகே உள்ள பி.தொட்டியபட்டியை சோ்ந்தவா் சுப்பிரமணி (97). சுதந்திர போராட்டத் தியாகியான இவா், கரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.17,500-ஐ வங்கி வரைவோலையாக பேரையூா் வட்டாட்சியா் சாந்தியிடம் வழங்கினாா்.