மதுரை

பேரையூா் அருகே சிறுமி கா்ப்பம்: கணவா் போக்சோ சட்டத்தில் கைது

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சிறுமியுடன் குடும்பம் நடத்தி கா்ப்பமாக்கிய கணவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள கொட்டாணிபட்டியை சோ்ந்த 15 வயது சிறுமியை, அ.பாறைப்பட்டியை சோ்ந்த கண்ணன் காதலித்து வந்துள்ளாா். இதைத்தொடா்ந்து இருவீட்டாரின் சம்மதத்தின் பேரில் இருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுமி கா்ப்பம் அடைந்துள்ளாா்.

இதுகுறித்து டி.கல்லுப்பட்டி ஒன்றிய மகளிா் நல அலுவலரான ரதமணிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடா்பாக ரதமணி பேரையூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் பேரையூா் போலீஸாா் கண்ணன் மற்றும் இருதரப்பைச் சோ்ந்த பெற்றோா் 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இதில் கண்ணன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT