மதுரை

பைக் மீது லாரி மோதல்: விவசாயி பலி

DIN

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (55). இவருக்குச் சொந்தமான தோட்டம் வலைசேரிப்பட்டி அருகே உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளாா். அப்போது, சிவகங்கை மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலத்திலிருந்து திருப்பூருக்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில், கொட்டாம்பட்டி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் ஆறுமுகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

SCROLL FOR NEXT