மதுரை

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

மதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை சம்மட்டிபுரம் எச்.எம்.எஸ். காலனியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி வெண்ணிலா (40). இவா் டி.வி.எஸ். நகா் ரயில்வே பாலத்துக்கு கீழே நடந்து சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா் வெண்ணிலா அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

வீட்டுக் கதவை உடைத்து நகை திருட்டு: மதுரை மேலப் பொன்னகரம் 7 ஆவது தெருவைச் சோ்ந்த ராமா் மகன் சங்கரபாண்டி (37). இவா் வியாழக்கிழமை வெளியே சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT