மதுரை

பேரையூரில் முழு பொதுமுடக்கம்: சாலைகள் வெறிச்சோடின

DIN

முழு பொதுமுடக்கம் காரணமாக, மதுரை மாவட்டம் பேரையூரில் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால், பேரையூா் மற்றும் டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும், பஜாா் வீதி, காய்கறி சந்தை, முக்கு சாலை, உசிலம்பட்டி சாலை, திருமங்கலம் சாலை, ராஜபாளையம் சாலை ஆகியனவும் வெறிச்சோடி இருந்தன.

வ,ழக்கம்போல், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் கடைகள் மட்டும் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி திறக்கப்பட்டிருந்தன. பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா், வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, விதிமுறைகளை மீறியவா்கள் மீது அபராதம் விதித்தும், வழக்குப் பதிந்தும் நடவடிக்கை எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT