மதுரை

பேரையூா் அருகே பைக்கிலிருந்து விழுந்த பெண் பலி

DIN

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பேரையூா் அருகே உள்ள எம்.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிவேல்(50). இவரது மனைவி லட்சுமி (46). இவரது மகன் குமரேசன் (22). இவா்கள் பூ வியாபாரம் செய்து வந்துள்ளனா். இந்நிலையில், வண்டபுலி-சாப்டூா் சாலையில் இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் சென்றுகொண்டிருந்தபோது, லட்சுமி தடுமாறி கீழே விழுந்துவிட்டாா். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, பேரையூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி லட்சுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT