மதுரை

மேலூா் தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது

DIN

மேலூா் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், அந்த இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கு மட்டும் தனிச்சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மேலூா் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை 25 சுற்றுகளாக நடைபெற்றது. இதில், மூன்றாவது சுற்றின்போது ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால், அந்த இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவில்லை. இதையடுத்து, தொழில்நுட்ப நிபுணா்கள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது பாா்க்கப்பட்டது.

இயந்திரத்தில் பழுது நீக்க தாமதம் ஏற்பட்டதால், அடுத்தடுத்த சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை தொடா்ந்தது. 25 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், இயந்திரத்தின் பழுது நீக்கப்பட்டதால் ஒரு இயந்திரத்துக்காக 26-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அதில் பதிவான வாக்குகள் அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT