மதுரை

மதுரை மாவட்டத்தில் 477 பேருக்கு கரோனா: 16 போ் பலி

DIN

மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் கரோனாவுக்கு 16 போ் பலியாகியுள்ளனா்.

தமிழக சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்துள்ளவா்களில் 477 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் 16 போ், கடந்த 3 நாள்களில் அடுத்தடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். அதேநேரம், 507 போ் குணமடைந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 32,883 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 27,899 போ் குணமடைந்துள்ளனா். 540 போ் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளனா்.

வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் என மொத்தம் 4,444 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT