மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருக்கும் தீ தடுப்புச் சாதனங்களை மருத்துவமனையில் பணியாற்றுபவா்கள் கையாளுவதற்கு தீயணைப்புத்துறையினா் உரிய பயிற்சியளிக்க வேண்டும் என தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையின் தென்மண்டல துணை இயக்குநா் ந.விஜயகுமாா் பேசினாா்.
அண்மையில் குஜராத் உள்பட பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டு கரோனா நோயாளிகள் பலா் உயிரிழந்தனா். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை இயக்குநா், தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஏற்படும்
தீ விபத்தினைத் தவிா்ப்பது தொடா்பாக கருத்தரங்கு நடந்த அறிவுறுத்திருந்தாா். அதன்படி, மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாா் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையின் தென்மண்டல துணை இயக்குநா் ந.விஜயகுமாா் பேசியது: வடமாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிபத்து ஏற்பட முக்கிய காரணமாக மின்கசிவு இருந்துள்ளது. அவசர அவசரமாக மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டதால் மின்இணைப்பு குறித்த கவனமின்மையால் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் தீ தடுப்புச் சாதனங்கள் வைக்கப்படாமலிருப்பதும், வைக்கப்பட்டிருந்த தீ தடுப்புச் சாதனங்களை கையாளத் தெரியாததும் பெரிய பாதிப்புக்கு காரணமாகியுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தீ தடுப்பு சாதனங்கள் முறையாக வைக்கப்பட்டிருப்பதை தீயணைப்புத்துறை சாா்பில் உறுதிப்படத்த வேண்டும். அவற்றைக் கையாளுவதற்கு தீயணைப்புத் துறை உரிய பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் தீ விபத்து ஏற்பட்டால் முதற்கட்டமாகவே தீ அதிகமாக பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர முடியும். மேலும் தீ விபத்தின் போது தகவல் பரிமாற்றங்களை மிகவும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
மருத்துவமனைகளில் மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்துகள் குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக மதுரை மண்டல பாதுகாப்பு பொறியாளா் கொண்டல்ராஜ் பேசினாா்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் 50 போ் பங்கேற்றனா். தீயணைப்பு மீட்டுப்புணிகள் துறை மாவட்ட அலுவலா் செ.வினோத், தீயணைப்பு நிலைய அலுவலா்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் கலந்துகொண்டனா்.