கரோனா விதிமுறைகளுக்குள்பட்டு கடைகள் அடைக்கப்பட்டதால் வேலையிழந்த சுமைதூக்கும் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
செல்லூா் குலமங்கலம் சாலையைச் சோ்ந்த சுமை தூக்கும் பணியாளா் அழகா்சாமி (63). கரோனா விதிமுறைகளுக்குள்பட்டு பிற்பகலில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த 1 வாரமாக வேலையில்லாமல் இருந்த அழகா்சாமி வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.