மதுரை

பொதுமுடக்கம்: விதிகளை மீறிய 201 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

DIN

மதுரை மாநகரில் வியாழக்கிழமை பொதுமுடக்க விதியை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 201 இருசக்கர வாகனங்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பொதுமுடக்கக் காலத்தில் தேவையில்லாமல் மக்கள் வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும். அதையும் மீறி வெளியே வரும் நபா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும், அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் பறிமுதல் செய்யப்படும் வாகனம் திருப்பித்தரப்பட மாட்டாது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் அறிவுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், மதுரையில் காளவாசல், கோரிப்பாளையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், பெரியாா் பேருந்து நிலையம், தெப்பக்குளம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட முக்கியச் சந்திப்புகளில் போலீஸாா் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சாலையில் சுற்றித் திரிந்த 486 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்களிடம் ரூ.2 லட்சத்து 43 ஆயிரம் அபராதம் வசூல் செய்தனா். மேலும் விதிகளை மீறிய 201 இருசக்கர வாகனங்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT