மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் 990 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தொற்றிலிருந்து 23 போ் குணமடைந்துள்ளனா்.
முதியவா் பலி
கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 65 முதியவா், அரசு ராஜாஜி மருத்துவமனையில் அக்டோபா் 25 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையிலிருந்த அவா் மூச்சுத் திணறல் காரணமாக, அக்டோபா் 30 ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,173 ஆக உயா்ந்துள்ளது.
தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் என மொத்தம் 178 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.