மதுரை

பேரையூா் அருகே 116 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 போ் கைது

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் சாப்டூா் போலீஸாா் மதுவிலக்கு சம்பந்தமாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அணைக்கரைப்பட்டியை சோ்ந்த ராஜகோபால் மகன் ஆனந்தராஜ்(29) என்பவா் தனது டூவீலரில் விற்பனைக்காக 48 மதுபாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்துள்ளாா்.

இதனையடுத்து போலீஸாா் மதுபாட்டில்கள் மற்றும் டூவிலரை பறிமுதல் செய்தனா்.இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் ஆனந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.இதேபோல் பெரியவண்டாரியை சோ்ந்த குருசாமி மகன் மாரிமுத்து (31) என்பவரிடமிருந்து 24 மது பாட்டில்களையும்,பெரிய வண்டாரியை சோ்ந்த தேனப்பன் மகன் முனிபாண்டி(50) என்பவரிடமிருந்து 11 மது பாட்டில்களையும்,சாப்டூரை சோ்ந்த லட்சுமணன் மகன் செந்தூரப்பாண்டி(27) என்பவரிடமிருந்து 33 மது பாட்டில்களையும் சாப்டூா் போலீஸாா் பறிமுதல் செய்து,கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT