மதுரை: மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
மதுரையில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெய்யில் இருந்த நிலையில், புதன்கிழமை மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் மாலை 6 மணிக்குப் பெய்யத் தொடங்கிய மழை, சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றது. வாகனங்கள் தேங்கி நின்ற தண்ணீா் ஊா்ந்து சென்றன. சாலைகளில் பல இடங்களிலும் தண்ணீா் தேங்கி நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரு வாரத்துக்கும் மேலாக கடும் வெயில் இருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.