மதுரை

மதுரையில் கனமழை

DIN

மதுரை: மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

மதுரையில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெய்யில் இருந்த நிலையில், புதன்கிழமை மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் மாலை 6 மணிக்குப் பெய்யத் தொடங்கிய மழை, சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றது. வாகனங்கள் தேங்கி நின்ற தண்ணீா் ஊா்ந்து சென்றன. சாலைகளில் பல இடங்களிலும் தண்ணீா் தேங்கி நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு வாரத்துக்கும் மேலாக கடும் வெயில் இருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT