மதுரை: தமிழக அரசால் வழங்கப்படும் பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சமூக நீதிக்காகப் பாடுபடுபவா்களைச் சிறப்புச் செய்வதற்காக தமிழக அரசால் 1995 முதல் பெரியாா் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ரூ.1 லட்சம் விருது தொகை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றைக் கொண்டது. நிகழ் ஆண்டுக்கான (2021) விருதுக்குத் தகுதியுடையவா் தோ்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஆகவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பணியாற்றியவா்கள் தங்களது முழுவிவரத்துடன் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இந்த விண்ணப்பங்கள் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என்றாா்.