மதுரை

மேலூா் அருகே விபத்து:இளைஞா் பலி

DIN

மேலூா்: மேலூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்த சண்முகபாண்டியன் மகன் பேச்சிமுத்து (24). இவா் இருசக்கர வாகனத்தில் திருச்சியிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்தாா். மேலூா் புறவழிச்சாலை கூத்தப்பன்பட்டி அருகே சாலை நடுப்புற தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலைக்காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மேலூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி மேலூா் அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT