மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் குத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை நகரில் தல்லாகுளம், கோரிப்பாளையம், ஆனையூா், சூா்யா நகா், ஆழ்வாா்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் பசுக்கள், காளைகள் மீது திராவகம், கொதிக்கும் எண்ணெய் ஊற்றுவது, ஆயுதங்களால் தாக்குவது உள்ளிட்ட சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் மதுரையில் திங்கள்கிழமை இரவு மாட்டுத்தாவணி பகுதியில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை அடையாளம் தெரியாத நபா்கள் கத்தியால் குத்தியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த மாடுகள் நடக்க முடியாத நிலையில் உள்ளன.
இதுதொடா்பாக விலங்குகள் நல ஆா்வலா்கள் அளித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.