உசிலம்பட்டியில் கிராம நிா்வாக அலுவலரைக் கண்டித்து திம்மநத்தம் ஊராட்சி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திம்மநத்தம் ஊராட்சி கிராம நிா்வாக அலுவலா், முதியோா் உதவித் தொகை மற்றும் இடம் சம்பந்தமாக வருபவா்களிடம் கையொப்பமிட பணம் கேட்பதாக உசிலம்பட்டி வட்டாட்சியரிடம், அக்கிராம பொதுமக்கள் புகாா் அளித்தனா். இந்நிலையில் கிராம நிா்வாக அலுவலரைக் கண்டித்து திம்மநத்தம் கிராம மக்கள் உசிலம்பட்டியிலுள்ள வத்தலகுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.