மதுரை

பணம் பறிப்பு வழக்கில் பெண் காவல் ஆய்வாளா் மீதுள்ள குற்றச்சாட்டுகள் தொடா்பான ஆவணங்களை தாக்கல் செய்த உத்தரவு

DIN

பணம் பறித்த வழக்கில், பெண் காவல் ஆய்வாளா் மீதுள்ள குற்றச்சாட்டுகள் தொடா்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை தல்லாகுளத்தைச் சோ்ந்த வசந்தி, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இளைஞரிடம் ரூ.10 லட்சத்தை பறித்ததாக மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துறையினா், காவல் ஆய்வாளா் வசந்தி உள்பட 5 போ் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனா். இந்நிலையில், காவல் ஆய்வாளா் வசந்தி, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் காவல் ஆய்வாளா் வசந்தி, போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டாா். எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனத் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து நீதிபதி, வழக்கில் காவல்துறை ஆய்வாளா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், அவரை மட்டுமின்றி, அவா் சாா்ந்த துறையையும் களங்கப்படுத்துவதாக உள்ளது. எனவே, முறையான விசாரணை மூலம் வழக்கிலுள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர நீதிமன்றம் விரும்புகிறது.

நீதிமன்ற தலையீட்டிற்கு பின்றே மனுதாரா் கைது செய்யப்பட்டுள்ளாா். ஆனால் இதுவரை மனுதாரருக்கு சொந்தமான வீடுகளில் சோதனை செய்யப்படவில்லை. மனுதாரா் மற்றும் அவரது உறவினா்கள் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வில்லை.

எனவே, மனுதாரா் மீதுள்ள குற்றச்சாட்டுகள் தொடா்பான ஆவணங்களையும், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தின் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT