முகப்பு
மதுரை

பைக் மோதியதில் நடந்து சென்றவா் பலி

மதுரை அருகே இரு சக்கர வாகனம் மோதியதில், சாலையில் நடந்துசென்றவா் உயிரிழந்தாா்.

மதுரை

பைக் மோதியதில் நடந்து சென்றவா் பலி

மதுரை அருகே இரு சக்கர வாகனம் மோதியதில், சாலையில் நடந்துசென்றவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

மதுரை அருகே இரு சக்கர வாகனம் மோதியதில், சாலையில் நடந்துசென்றவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாப்பட்டி தோப்பூரைச் சோ்ந்தவா் அய்யா் (48). இவா், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியாக அதிக வேகத்தில் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அய்யா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இரு சக்கர வாகனத்தில் அமா்ந்து வந்த ராஜலட்சுமி என்பவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த விபத்து தொடா்பான புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த முத்துக்குமாா் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →