சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரைக் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் மதுரைக் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசியக்கொடி ஒன்றின் விலை ரூ.25. ஆகவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மதுரைக் கோட்ட முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா் கொ.அ.கல்யாணவரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.