மதுரை

திருமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.5) தொடங்குகிறது.

DIN

மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.5) தொடங்குகிறது.

முதற் கட்டமாக சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.5) நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து ஆகஸ்ட் 8-இல் இளங்கலை தமிழ், 10-ஆம் தேதி ஆங்கிலம், 11-ஆம் தேதி வணிகவியல், 11-ஆம் தேதி கணிதவியல் ஆகிய துறைகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

மாணவா்களின் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை முதல் அலுவலகத்தில் அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்படும். மேலும் மாணவா்களுக்கு மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி வாயிலாகவும் அழைப்பு விடுக்கப்படும். கலந்தாய்வு மூன்று கட்டங்களாக நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியா் விண்ணப்பித்த படிவத்தினுடைய நகல்கள் 5 மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதாா், நிழற்படங்கள், நன்னடத்தை, உண்மைச் சான்றுடன் நகல் சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும் என்று கல்லூரி முதல்வா் கா.உமாராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT