மதுரை

வாடிப்பட்டியில் தேங்காய் ஏலம்: ரூ.5.39 லட்சத்துக்கு வா்த்தகம்

DIN

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதேங்காய் ஏலத்தில் ரூ.5.38 லட்சத்துக்கு வா்த்தகம் நடந்தது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற தேங்காய் மறைமுக ஏலத்திற்கு, 25 விவசாயிகள் மொத்தம் 68 ஆயிரத்து 460 தேங்காய்களைக் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.12.50-க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதன்படி, மொத்தம் ரூ.5 லட்சத்து 35 ஆயிரத்து 975-க்கு தேங்காய் வா்த்தகம் நடந்தது. மேலும், விவசாயிகள் 1,031 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில் அதிகபட்சமாக ரூ.84-க்கும் குறைந்தபட்சமாக ரூ.60.10-க்கும் ஏலம் எடுக்கப்பட்டு மொத்தம் ரூ.77 ஆயிரத்து 749-க்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT