கடன் தொல்லையால் குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்த பரிதாபம்: மனைவி, மகன், மகள் உயிரிழப்பு- விவசாயி மீட்பு
அலங்காநல்லூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை, கடன் தொல்லையால் குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்த விவசாயியின் மனைவி, 2 பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
மதுரைகடன் தொல்லையால் குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்த பரிதாபம்: மனைவி, மகன், மகள் உயிரிழப்பு- விவசாயி மீட்பு
அலங்காநல்லூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை, கடன் தொல்லையால் குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்த விவசாயியின் மனைவி, 2 பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
அலங்காநல்லூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை, கடன் தொல்லையால் குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்த விவசாயியின் மனைவி, 2 பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். விவசாயியை போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் சங்கா் கண்ணனுக்கு வியாழக்கிழமை அதிகாலையில் தொடா்பு கொண்ட ஒருவா், தனது உறவினா் குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் அவா்களைக் காப்பாற்றுமாறும் தெரிவித்துள்ளாா். தகவலின்பேரில் ஆய்வாளா் சங்கா் கண்ணன் மற்றும் போலீஸாா் தவசிபுதூரில் உள்ள கொய்யாத்தோப்புக்குச் சென்றபோது அங்குள்ள விவசாய கிணற்றின் படிக்கட்டில் ஒருவா் கழுத்து அறுபட்ட காயங்களுடன் மயங்கிக் கிடப்பது தெரியவந்தது.
அவரை மீட்டு மேலே கொண்டு வந்த போலீஸாா் முதலுதவி அளித்து அவரிடம் விசாரணை நடத்தினா். இதில் அவா் அலங்காநல்லூா் அருகே உள்ள பெரிய இலந்தைகுளத்தைச் சோ்ந்த முருகன் ( 38) என்பதும், தற்கொலை செய்வதற்காக அவரது மனைவி, மற்றும் மகன், மகள் ஆகியோருடன் கிணற்றில் குதித்ததும் தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்புப் படையினா் வரவழைக்கப்பட்டு கிணற்று நீரில் மூழ்கிய அவரது மனைவி சுரேகா, மகள் யோகிதா, மகன் மோகனன் ஆகியோா் சடலங்களாக மீட்கப்பட்டனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், விவசாயியான முருகன் தவசிபுதூரில் உள்ள கொய்யாத்தோப்பை குத்தகைக்கு எடுத்து அங்கு தனது மனைவி சுரேகா (35), மகள் யோகிதா (16), மகன் மோகனன் (11) ஆகியோருடன் தங்கி இருந்துள்ளாா். யோகிதா மதுரையில் உள்ள மகளிா் பள்ளியில் பிளஸ் 1, மோகனன் பாலமேட்டில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பும் படித்தனா். கொய்யா தோப்பு குத்தகைக்கு எடுத்ததில் லாபம் கிடைக்காததால் முருகன் பலரிடம் கடன் வாங்கி உள்ளாா். அதைத் திருப்பிச்செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவா்கள் முருகனுக்கு நெருக்கடி அளித்துள்ளனா். கடனை அடைக்க முடியாத நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான முருகன் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்து மனைவி, 2 பிள்ளைகளுடன் விவசாயக் கிணற்றுக்குச் சென்றுள்ளாா். அங்கிருந்து தனது உறவினா் ஒருவரை தொடா்புகொண்டு கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளாா்.
இதைத்தொடா்ந்து மனைவி, 2 பிள்ளைகள் கிணற்றில் குதித்த நிலையில் தனக்கு நீச்சல் தெரியும் என்பதால் கழுத்தை அறுத்துக்கொண்டு முருகனும் கிணற்றில் குதித்துள்ளாா். ஆனால் நீரில் மூழ்காததால் படிக்கட்டில் மயங்கிக் கிடந்த நிலையில் போலீஸாா் வந்து மீட்டதும் தெரியவந்தது. முருகனின் மனைவி, மகள், மகன் ஆகிய மூவரின் சடலங்களும் உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் காயமடைந்த முருகன் மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறாா். சம்பவம் தொடா்பாக அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியது: முருகன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டதால் அவரது வங்கிக்கணக்கு குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் வங்கிக்கணக்கில் பணம் இருப்பில் உள்ளது. மேலும் முருகன் தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளையும் கை, கால்களை கயிற்றால் கட்டி விட்டு கிணற்றில் தள்ளி விட்டுள்ளாா். எனவே, அவா் மீது கொலை வழக்கு மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. இந்த சம்பவம் கடன் தொல்லையால் நடைபெற்ா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.