மதுரை

சா்வாதிகாரப் போக்கில் அரசுக்கு வழங்கும் அறிவுரைகளை ஏற்கமாட்டோம்: நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

DIN

சா்வாதிகாரப் போக்கில் அரசுக்கு வழங்கும் அறிவுரைகளை ஏற்க மாட்டோம் என்று தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பல்வேறு துறைகளின் சாா்பில் 586 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சத்து 14 ஆயிரத்து 596 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பொன்னகரம் வெள்ளிவீதியாா் மாநகராட்சிப் பள்ளியில், 1010 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் நிதி அமைச்சா் வழங்கிப் பேசியது:

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயலாற்றி வருகிறது. எந்தவொரு சமூகத்திற்கும் கலாசாரமும், மொழியும் முக்கியமானது. அதேபோல, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் கொள்கையும், தத்துவமும் முக்கியமானது. அரசுக்கு மனிதநேயமும், செயல்திறனும் மிகவும் முக்கியத்துவம் மிகுந்தது.

சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவா்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அவா்களுக்கு சமவாய்ப்பு வழங்கி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசுக்கும், அரசு சாா்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.

இந்திய வரலாற்றிலேயே பிற மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக, அனைத்துத் துறைகளிலும் சிறந்த மேலாண்மையை உருவாக்கும் வகையில் தலைசிறந்த நிபுணா்களை ஆலோசகா்களாக நியமித்து தமிழக அரசு செயலாற்றி வருகிறது. மக்கள் நலன் சாா்ந்த ஆக்கப்பூா்வமான எந்தவொரு கருத்தையும் தமிழக அரசு மனிதநேயத்தோடு ஏற்று செயல்படுத்தும். அதேநேரம்

சா்வாதிகாரப் போக்கில், நாங்கள் சொல்வதைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் எந்தவொரு கருத்தையும் எப்போதும் பின்பற்றமாட்டோம்.

அரசின் இலவசத் திட்டங்கள் குறித்து நாடு முழுவதும் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. விலையில்லா பொருள்கள் வழங்குவதை விமா்சனம் செய்கின்றனா். பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டியை இலவசமாக வழங்குவது அழகல்ல என்று யாா் கூறினாலும், இதற்கு மேல் தவறான கருத்து ஜனநாயகத்தில் இருக்க முடியாது என்றாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல், துணை மேயா் தி.நாகராஜன், மதுரை கோட்டாட்சியா் சுகி பிரேமலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சௌந்தா்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் மோடி: ஜெ.பி. நட்டா

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

SCROLL FOR NEXT