மதுரை

மதுரை அருகே ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 78 ஆயிரம் பறிமுதல்

DIN

மதுரை: மதுரை அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.78 ஆயிரத்து 690-ஐ தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரையை அடுத்த பரவை பேரூராட்சிக்குள்பட்ட, ஊா்மெச்சிகுளம் சந்திப்பில், வட்டாட்சியா் சரவணப்பெருமாள் தலைமையில் சாா்பு- ஆய்வாளா் முத்துப்பாண்டி, தலைமைக் காவலா் நாகலிங்கம், காவலா் மனோரஞ்சிதம் ஆகியோா் கொண்ட தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த, வங்கிகளுக்கு ரொக்கப் பணம் கொண்டு செல்லும் வாகனத்தை சோதனையிட்டனா். அதில் 3 தனித்தனி பைகளில், பல்வேறு நிறுவனங்களிடம் வசூலித்து வங்கியில் டெபாசிட் செய்வதற்கான ரொக்கம் இருந்தது. அதில், இரு பைகளில் உரிய ரசீதுகளுடன் ரொக்கம் இருந்தது. மூன்றாவது பையில் இருந்த ரூ.78,690-க்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அத்தொகையைப் பறிமுதல் செய்து, ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் பறக்கும்படையினா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT