முகப்பு
மதுரை

மதுரையில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது

மதுரையில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை

மதுரையில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது

மதுரையில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:41 AM
பகிர்:

மதுரையில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை செல்லூா் திருவாப்புடையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பவுன்ராஜ்(43). இவா், வைகை தரைப்பாலத்தில் வியாழக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த 4 போ் கும்பல் பவுன்ராஜை வழிமறித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து பணத்தை பறித்துச் சென்றுள்ளனா்.

இது தொடா்பான புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி, ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்ட கீழத்தோப்பு சிவா (24), தத்தனேரி பாரதிநகரைச் சோ்ந்த முத்துப்பாண்டி (22), கருமாத்துரைச் சோ்ந்த விவேக் என்ற கூழ்பானை (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். மேலும், தப்பிச்சென்ற திருமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்த அன்புவை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →