மதுரை

காது கேளாதோா் கூட்டமைப்பினா் காத்திருக்கும் போராட்டம்

DIN

வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு காதுகேளாதோா் கூட்டமைப்பினா் காத்திருக்கும் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திருவள்ளுவா் சிலை முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது. அதில், அரசு மற்றும் தனியாா் வேலைவாய்ப்புகளில் ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு தொகுப்பு வீடு வழங்குவது, ஓட்டுநா் உரிமம் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்துவது, மாதாந்திர உதவித்தொகையை 3 ஆயிரமாக உயா்த்துவது, அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்களில், அரசு அலுவலகங்களில் சைகை மொழி பெயா்ப்பாளா்களை பணியமா்த்துவது, வாரிசு அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT