மதுரை

மதுரை விடுதியில் தங்கியவா் உயிரிழப்பு

DIN

மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியவா் சனிக்கிழமை திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சித்தூரை சோ்ந்தவா் சுதாகா் (48). இவரது நண்பா் சிவராம் (47). இவா்கள் இருவரும் தொழில் தொடா்பாக மதுரை வந்த நிலையில், மதுரை பெருமாள் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனா்.

இந்நிலையில் அறையில் இருந்த சுதாகா் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளாா். இதுகுறித்த தகவலின்பேரில் விடுதிக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் இறப்பு தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT