மேலூர் அருகே திருவாதவூர் திருமறைநாதர் சிவன் கோயிலில் திருக்கல்யாணம். 
மதுரை

மேலூர் அருகே திருவாதவூர் திருமறைநாதர் சிவன் கோயிலில் திருக்கல்யாணம் 

மேலூர் அருகே மிகப்பழமையான திருவாதவூர் திருமறைநாதர் சிவன் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

DIN

மேலூர் அருகே மிகப்பழமையான திருவாதவூர் திருமறைநாதர் சிவன் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த ஸ்தலமான திருவாதவூரில் உள்ள மிகப்பழமையான திருமறைநாதர், வேதநாயகி சிவன்கோயில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து 7ஆம் தேதி சுவாமி மேலூர் மண்டகப்படிகளில் எழுந்தருலும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதையடுத்து இன்று திருமறை நாதர், வேதநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபோகமாக நடைபெறும் விதமாக சிவாசாரியார்கள் மாலை மாற்றிக் கொண்டு அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தனர். அப்போது விழாவில் கலந்துக்கொண்ட பெண்கள் புது திருமாங்கல்ய கயிறு மாற்றிக்கொண்டனர்.

இதையடுத்து பக்தர்களுக்கு கோவில் சார்பில் திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது. இந்த விழாவிற்காக மதுரை, மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, திருப்புவனம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT