மதுரை

மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சூரக்குண்டு கிராம மக்கள் சாலை மறியல்

DIN

மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அடிப்படை வசதிகள் கோரி சூரக்குண்டு கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே சூரக்குண்டு ஊராட்சி நிா்வாகம் அடிப்படை வசதிகளையும், தெருக்குழாய்களில் குடிநீா் விநியோகத்தையும் செய்து தரவில்லை எனப் புகாா் கூறி, பொதுமக்கள் மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த போலீஸாா் மற்றும் மேலூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசந்தா் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் விநியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT