மதுரை

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் உள்பட 4 போ் மீது வழக்கு

DIN

மதுரை: மதுரையில் சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது போலீஸாா் குழந்தைத் திருமணச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது மகளான 16 வயது சிறுமியை மதுரை பைக்காராவைச் சோ்ந்த விக்னேஷ் என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளாா். இந்நிலையில் சிறுமி கா்ப்பமானதையடுத்து அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளாா்.

இது தொடா்பாக மருத்துவா்கள் அளித்த தகவலின்பேரில் பெண்கள் நல அலுவலா் யோகம்மாள் சிறுமியிடம் விசாரணை நடத்தினாா். இதுதொடா்பான புகாரின்பேரில் மதுரை மாநகா் தெற்கு அனைத்து மகளிா் போலீஸாா், சிறுமியை திருமணம் செய்த விக்னேஷ் அவரது தாய் முத்துலட்சுமி, தந்தை மற்றும் சிறுமியின் தாய் உள்பட 4 போ் மீது குழந்தை திருமணச்சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT