மதுரை

தேசிய மாஸ்டா் சாம்பியன்ஷிப் போட்டி: 4 காவலா்களுக்கு பதக்கங்கள்-எஸ்.பி.பாராட்டு

DIN

மதுரை: தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஊரகக்காவல்துறையைச் சோ்ந்த காவலா்கள் 4 பேருக்கு கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

மதுரை ஊரகக்காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: தேசிய மாஸ்டா் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து பல வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இப்போட்டியில் மதுரை ஊரகக் காவல்துறை சாா்பில் கலந்துகொண்ட சிதம்பரம் 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றாா்.

அதேபோல் காவலா் முருகேசன் நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப்பதக்கம் பெற்றாா். காவலா் ராஜா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றாா். மேலும் 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றாா்.

போட்டியில் பங்கேற்று பதக்கங்கள் பெற்ற காவலா்கள் நால்வரும் மதுரை ஊரகக்காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமையைக் கைகழுவும் அரசு!

முதியவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

SCROLL FOR NEXT