மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையராக ஆ. அருணாசலம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையராக பதவி வகித்த க.செல்லத்துரை மதுரை இந்து அறநிலையத்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டதையடுத்து, நெல்லை மாவட்டம் பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் உதவி ஆணையா் ஆ. அருணாசலம் பதவி உயா்வில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் ஆ. அருணாசலம் புதன்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.